திங்கள், 9 ஆகஸ்ட், 2010

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் 4 அணிந்துரை தொடர்

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் அணிந்துரை தொடர் 4
23) திரவுபதி மகா பதிவிரதைகளுள் ஒருத்தி இவளுக்கு 5 கணவர்கள். இவர்கள் போதாதென்று 6 ஆவதாகக் கர்ணன் என்பவனையும் மோகித்தாள்.
௨௪) மகாபதிவிரதைகளுள் மற்றொருத்தி தாரை . இவள் தேவகுரு பிரகஸ்பதியின் மனைவி . இவள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயத்தில் , தன் கணவரிடம் படிக்க வந்திருந்த சந்திரன் எனும் மாணவனை மோகித்து , அவனுடன் கலவி செய்து , நீண்ட நாள் வரை அவனுக்கு ஆசை நாயகியாய் இருந்து புதன் என்ற குழந்தையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் பிரகஸ்பதியின் மனைவியானாள் .

( 25) . கவி முனிவர் மனைவி முகுந்தைக்கு ருக்மாங்கதன் மீது மோகம் வந்தது . அவனோ இவளைச் சேர மறுத்துவிட்டான் . அவளுக்கு ருக்மாங்கதன் மீது மட்டற்ற மையல் ஏற்பட்டு அதே விகாரத்திலிருக்கையில் , இதையறிந்த இந்திரன் ருக்மாங்கதன் போல வேடம் பூண்டு அவளைப் புணர்ந்து மகிழ்வித்தான் .

இவை பிற புருஷரை இச்சிக்கும் குணத்தைக் காட்டவில்லையா ?

(26) . ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் . இவர் சிறு பிள்ளையிலேயே வெண்ணை திருடி மத்தால் அடி பட்டவர் . வளர்ந்து பருவ வயதையடைந்தவுடன் பெண் சாயல் எந்த வீட்டில் காணப்பட்டாலும் சரி , உடனே திருட்டுத்தனமாக அப்பெண்ணைக் கூடியவர் . இவ்வாறாகச் சுமார் 60,000 பெண்களைத் திருட்டுத்தனமாக அவர்களுடைய கணவர்கள் அறியாமல் - கலவி செய்தவர் .

இவை திருட்டுச் செயலைக் கற்பிப்பவையாக இல்லையா?

(27) . தேவர்கள் சுராபானம் - சோமபானம் செய்தனர் என்பதாக இதிகாச - புராணங்கள் கூறுகின்றன .

இது மது அருந்துதலைக் காட்டுவதாக இல்லையா?

(28) . கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவு பெற்றவர்களும் இந்திராதி தேவர்களின் புதல்வர்களுமான தர்மர் ஆகியோர் தங்களின் மனைவி உள்பட எல்லாவற்றையும் சூதாட்டத்தில் வைத்து தோற்று , அதன் பலனாகச் , சூதாட்டத்தில் தோற்கப்பட்ட பொருளாகிய திரவுபதையை , இராஜசபையில் வைத்து சேலையை அவிழ்த்து , மானபங்கம் செய்தனர் - சூதாட்டத்தில் வென்றவர்கள் .

இது சூதாட்டத்தைக் கற்பிக்கவில்லையா?

(29) . கொலையைக் கற்பிக்கும் சம்பவங்கள் பல , காமவெறியால் விருந்தையின் கணவனை விஷ்ணு கொன்றான் .

(30) . தக்க பருவடையாத - ருதுவாகாத -மச்சகந்தி என்னும் பெண்ணை பட்டப்பகலில் நடு ஆற்றில் படகில் பராசரமுனி காமமுற்று கற்பழித்து விட்டான் .

(31) . இதே போன்று குந்தி பருவமடையாத சிறுமியாயிருக்கையில் சூரியன் காமுற்று கற்பழித்து விட்டான் .

இவை சின்னஞ்சிறுமிகளையும் விடாமல் புணரும் புத்தியைக் காட்டவில்லையா?

தொடரும் .......

திங்கள், 5 ஜூலை, 2010

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் அணிந்துரை தொடர் 3

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் அணிந்துரை தொடர் 3

11) பிரமன் சரஸ்வதியைப் படைத்தான். அவலழகைக் கண்டு மோகித்து அவள் பயந்தோடியும் விடாமல் அவளைப் புணர்ந்து தம் மனைவியாக்கிக் கொண்டான். தாம் படைத்த மகளையே இவ்வாறு மனைவியாக்கிக் கொண்டதைப் பரிகசித்த முனிவர்களாகிய மரீச புத்திரர் 6 பேர்களையும் சினந்து அசுரர்கள் ஆகுமாறு சபித்தான். இதே போன்று இந்திரன் வேண்டுகோளின் மீது திலோத்தமையைப் படைத்து அவளையும் மோகித்துக் கூடினான்.

12) பிரமன் இதே போன்று தாமரை மலரிலிருந்து பத்மை என்ற பெண்ணைப் படைத்து அவளைப் புணர முயல, அவள் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அவளைப் பலவந்தமாகக் கற்பழிக்க அவள் அதனால் கருக்கொள்ள, தேவர்கள் இதையறிந்து நையாண்டி செய்ய இதைச் சகிக்காத பிரமன் மீண்டும் அவளைப் புணர்ந்து அவள் கருவிலிருந்த தன ஆண் குறி மூலம் உறிஞ்சி இழுத்து விட்டான்.

இவை மகளைத் தகப்பனே புணரும் வழக்கத்தைக் காட்டுவதல்லவா?

13) பெற்ற தாய் மீது மோகங் கொண்டு, அதற்குப் பாதகமாயிருக்கும் தந்தையைக் கொன்று தாயுடன் கலவி செய்து இன்ப வாழ்வு நடத்திய ஒரு பார்ப்பனப் பையனுக்குப் பரமசிவன் முக்தியளித்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

இது தாயைப் புணர்ந்தாலும் முக்தி நிச்சயமென்பதன் மூலம் தாயைப் புணரும் வழக்கத்தைக் காட்டவில்லையா?

14) தாருகாவனத்து ரிசிபத்தினிகள் அழகிகள் என்பதற்காகப் பரமசிவன் அவர்களை மயக்கிப் புணர்ந்து அவர்கள் கற்பை அழித்தான்.
15) பிரமனோ தன பெர்த்தியாகிய தாச்சாயணியின் அழகைக் கண்டு மோகித்து வீர்யத்தை விட்டான். பரமசிவன் மனைவியாகிய பார்வதி தேவி மீது பிரமன் காமமுற்று பரமசிவனைப் போல் 5 தலைகளுடன் சென்று அவளை அணைத்தான்.

16) இந்திர சபையில் ஊர்வசி நடனமாட பிரமன் அவளைப் பார்த்து மோகித்து வீரியத்தை வெளியே விட்டான்.

17) துரோணரின் மனைவி கிருபியின் அழகினை அறிந்த பரமசிவன் அவள் மீது காமவெறி கொண்டு, அவளை நிர்வாணமாக்கி நிற்க வைத்துப் பார்த்து வீரியத்தை விட, அதன் பலனாக அஸ்வத்தாமன் பிறந்தான்.

18) கவுதம முனிவர் மனைவி அகலிகை அழகி எனக் கேள்விப்பட்ட இந்திரன் இரவு நடுச்சாமத்தில் முனிவரை ஏய்த்து வெளியேறச் செய்து அம முனிவர்போல இந்திரன் வேடம் பூண்டு அகலிகையைப் புணர்ந்தான். இதே போன்று அவரவரின் கணவர்களைப் போன்று நடித்து இந்திரத் துய்மன் மனைவியையும் தேவசன்மன் மனைவியையும் பாரிசாதன் மனைவியையும் கற்பழித்தான்.

19) அக்னி பகவானின் மருமகளை எமதரும பகவான் கண்டு மோகித்து அவள் கணவன் இல்லாத சமயத்தில் அவளைப் புணர்ந்தான்.

20) அக்னி பகவான் சப்தரிசிகளின் யாகத்திற்குச் சென்று அந்த ரிசிகளின் மனைவிகள் மீது மையல் கொண்டான். சுதரிசனை என்பவளைப் பலாத்காரத்தினால் மணந்தான் .
21) சலந்திரன் மனைவி விருந்தை மீது மகாவிஷ்ணு மோகங் கொண்டு சலந்திரனைச் சூதால் கொன்று அவனைப் போன்று வேடம் பூண்டு விருந்தையைக் கற்பழித்தான்.
22) அனசூயை அழகி என்று கேள்வி பட்டு அவளைக் கற்பழிக்கவேன்று பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய முமூர்த்திகளும் புறப்பட்டுச் சென்று அவளை நிர்வாண மாக்கினர் .

இவை பிறர் மனைவிகளைக் கண்டு காமுறுதலும் கற்பழித்தலுமாகிய செயலைக் காட்டவில்லையா?

தொடரும்