வியாழன், 27 ஆகஸ்ட், 2009

விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.

விநாயகன், பிள்ளையார், கணபதி, கணேசன் இப்படி பல்வேறு புனைப் பெயர்களில் இருக்கிற கலவர நாயகன் தமிழகத்திற்கு எப்போது வந்தார், என்பது பெரும் விவாதமாகத்தான் இருக்கிறது.
மதவாதிகள், சாதிய அபிமானிகள் தங்கள் மதத்தை, சாதியை, கடவுளை மிகப் பழமையானவர், பழமையானவை என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் பெருமை கொள்வார்கள்.
அப்படித்தான் விநாயகனை வழிபடுகிற, வழிபட பரிந்துரைக்கிற இந்து கண்ணோட்ட ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், 5 நூற்றாண்டு என்றும் இல்லை அதற்கு முன்பே 2 நூற்றாண்டிலேய வந்து விட்டார் என்றும் பெருமை பட்டுக் கொள்கிறார்கள். (’கடவுள் கொண்டுவரப்பட்டவர்‘ என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்)
சைவசமயத்தின் கட்டுக்கதையான பெரியபுராணத்தை சேக்கிழர் எழுதுவதற்கு காரணமாக இருந்தது, சுந்தரரின் பாடல்தான் என்று சொல்கிறார்கள். சுந்தரருக்கு அது எப்படி தெரியும் என்றால், அவருக்கு ஒரு கல்லு பிள்ளையார் அந்தக் கதையை சொன்னதாக ‘விட்டலாச்சாரியார்‘ பாணியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் பிள்ளையார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
வட இந்தியாவில் ஏன் முதலில் விநாயகன் அவதரித்தார் என்பதை தெரிந்து கொண்டால் அவர் தமிழகத்திற்கு எதற்காக வந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
மகாவீரரின் சமணமும், அதன் பிறகு புத்தரின் எழுச்சியும் பார்ப்பன வேதங்களை, வேத மதத்தை அதன் ஜாதிய கண்ணோட்டத்தை பொத்தல் ஆக்கியது. ‘பிறப்பால் எவனும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை‘ என்று இந்து மத அல்லது வேத மத எதிர்ப்பாக வீறு கொண்டு நின்றது பவுத்தம். புத்தருக்கு பிறகும் அவரின் சீடர்களால் இந்தியா முழுக்க இந்த அலை ஓயாது பார்ப்பனியத்திற்கு எதிராக அடித்துக் கொண்டே இருந்தது.
அதன் தாக்கத்தால்தான் தமிழகத்து திருவள்ளுவரும்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்று வேத மதத்தின் மீது காறி உமிழ்ந்தார்.
பவுத்ததின் இந்த அலை, பார்ப்பனியத்தை நிலை குலைய வைத்தது. பார்ப்பனியத்தை காப்பதற்காகத்தான் பெருமாள் பத்து அவதாரங்களை எடுக்கிறார். சிவன் மனித உருவம் (பார்ப்பன) கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
ஆனாலும் பெருமாலும், சிவனும் வீதியில் இறங்கி பக்தர்களோடு நெருக்கமாக இருக்க ஆகம விதிகள் இடம் தரவில்லை. அப்படி இடம் தருவதாக மாற்றிக் கொண்டால், பிறகு அவர்களின் மீதுள்ள ஒரு பயம் கலந்த பக்தி அற்றுப் போகும்.
அல்லது பார்ப்பனர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக கடவுளை வழிபட வேண்டிய முறை உண்டாகும் என்பதால், பவுத்தத்தை எதிர் கொள்ள அதுவரை இல்லாத முறையில் ஒரு புதிய கவர்ச்சியான கடவுள் தேவைப்படுகிறார்.
அதன் பொருட்டு பவுத்ததிடம் இருந்து இந்து மதத்தை மீட்க, தோழமையான, யார் வேண்டுமானாலும் தொட்டு உருவாக்க, வழிபட, எங்கு வேண்டுமானாலும் வைத்து புழங்க, நிறுவ ஒரு கடவுளாக உண்டாக்கப்பட்டவர்தான் விநாயகர்.
அதனால்தான் விநாயகர் அரசமரத்தடியிலும் அமர்ந்திருக்கிறார். அரசமரம் என்பது புத்தருக்கு உரியது. அரசமரத்தின் இன்னொரு பெயர்தான் போதி மரம்.
விநாயகர் என்ன காரணத்திற்காக உண்டாக்கப்பட்டாரோ அதை அவர் சிறப்பாக நடத்தி முடித்தார்.
(சைவர்களிடமும் வைணவர்களிடமும் பேதமிருந்தாலும் அவர்களிடம் விநாயகனை வழிபடுவதில் மட்டும் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும்.)
அதன் பிறகு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள், பின் தங்கிய மக்கள் ஜாதிய ஒடுக்குமுறையை கண்டித்து இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு குறிப்பாக இசுலாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அப்பொதெல்லாம் விநாயகர் அவர்களை போய் தடுத்தாட் கொள்வார்.
அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அவர்களுக்கு அதிக முன்னுரிமை தருகிறார்கள். அதை இசலாமியர்கள் வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கலவரம் செய்வதற்கு அவர்களையே பயன்படுத்துகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாக செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இசலாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்துவெறியர்கள் அடம்பிடிப்பதின் உள்நோக்கம் கலவரத்தை மனதில் கொண்டே.
விநாயகன் தீண்டாமையையும், பார்ப்பனியத்தையும் பாதுகாப்பதற்காக ‘தோழமையோடு‘ எந்த கலவரத்தையும் செய்யத் தயாரானவன்.
விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.

நன்றி : மதிமாறன் தமிழ்நாடு.


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் நூல் அணிந்துரை தொடர் 2

a௧. சூரியனுடைய தேர் சாரதியின் பெயர் அருணன். இவன் இருகால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை விநோதங்களைக் காண்பதற்கு பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர சூரியன் காரணம் கேட்டு நடந்ததை அறிந்து மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வர வேண்டி அவன் அப்படியே வர அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

௨. நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ணா பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர அதன் பயனாய் ௬0 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.

௩. தவ வலிமை மிக்க பத்மாசூரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது , மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பத்மாசூரனை மயக்கி , அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின் , அந்த மோகினி வேதத்திலிருந்து விஷ்ணுவை , உயிருக்கு பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்து சிவன் மோகித்து புணர , அதன் பலனாக அரிதார புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தை காட்டுபவை அல்லவா?

௪. பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவ சென்றிருந்தபோது , அங்கிருந்த சித்திரகூடத்தில் ஆண் -பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவியத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு , பக்கத்தில் இருந்த பார்வதியைப் பெண் யானையக்கி புணர்ந்து , கணபதியைப் பெற்றான் .
௫. சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.
௬. பிரமன் திலோத்தமையைப் படைத்து வளழகைக் கண்டு மோகிக்க அவள் பிரமன் செயல் கண்டு பயந்து பெண் மானுருக் கொண்டு ஓட பிரமன் அவளைத் துரத்திக் கொண்டு போய்ப் புணர்ந்தான்.

௭. பாரிஷதன் என்பவனின் மனைவி வபுஷ்டமை என்பவள் மீது இந்திரன் காமம் கொள்ள அவள் அவனுக்கு இணங்காமற் போக இந்திரன் எப்படியாவது அவளைச் சேர்ந்தேயாக வேண்டும் என்று எண்ணிச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சமயம் பாரிஷதன் அஸ்வமேதம் நடத்தினான். யாக குதிரையுடன் யாக கர்த்தாவின் மனைவியைப் புணர வைப்பது அச்வமேதத்தின் முக்கியச் சடங்கு. ஆகையால் தான் யாக குதிரையாக இருந்தால் பாரிஷதன் மனைவியாகிய வபுஷ்டமையிடத்து யாகப் புரோகிதர்களே சேர்த்து வைப்பார்கள். ஆகையால் தான் யாக குதிரையாக வேண்டுமென்று இந்திரன் உறுதி செய்து கொண்டான். அதன்படி அஸ்வமேதம் நடந்த போது இந்திரன் யாகக் குதிரையைக் கொன்று அதனுடலில் தான் புகுந்து கொண்டான். யாக முறைப்படி யாகக் கர்த்தாவாகிய பாரிஷதனின் மனைவியாகிய வபுஷ்டவையின் பெண் குறியில் யாக ஆண் குதிரையின் குறியை யாகப் புரோகிதர்கள் சேர்த்து வைத்த சமயத்தில் இந்திரன் தம் காம எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான்.


௯ அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாக கர்த்தாவின் பத்தினியை, யாக மிருகத்துடன் புணரவைக்கும் வேலையை யாககர்த்தாவும் யாகப்புரோகிதர்களும் சேர்ந்து செய்வர்.
௧0.பூமியைப் பாய் போலச் சுருட்டிக் கொண்டு கடலில் போய் ஒளித்த இரண் யாஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக் கண்டு பூதேவி மோகித்துக் கலவிசெய்ய, இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்.
இவை மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?
தொடரும்

செவ்வாய், 21 ஜூலை, 2009

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் நூல் அணிந்துரை

தமிழர்களாகிய நம் அனைவருக்கும் குலம் ஒன்றே . நமக்குள் உயர்வு தாழ்வு வேறுபாடுகள் இல்லை. நமக்குக் கடவுளும் ஒன்றே என்னும் உயர்ந்த முறையில் வாழ்க்கை நடத்தியவர்கள் நம் முன்னோர்கள்.
அது மட்டுமல்ல இவ்வுலகின் கண்ணுள்ள ஊர்கள் யாவும் நம் ஊர்களே ; உலக மக்கள் யாவரும் நம் உறவினரே என்ற பரந்த பொதுமைக் கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

இவ்வளவு சிறந்த வாழ்க்கை முறையும், பரந்த நோக்கமும், ஒற்றுமைப் பண்பும் கொண்டு வாழ்ந்த தமிழ் முதுகுடி மக்களின் மரபினரே நாம் எனின், அறிவாற்றல் மிக்க அப்பெருங் குடி மக்களின் வாழ்க்கைச் சிறப்பில் ஒரு சிறு அளவாவது நம்மிடை இன்றுள்ளதா?

ஏன் இல்லை? என்ன இல்லை? என்பனவற்றை நாம் என்றாவது ஒரு பொழுதாவது எண்ணிப் பார்த்தது உண்டா?

பழந்தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் ஒரே குலத்தினராக வாழ்ந்தார்கள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினரே. பெண் கொடுத்தல் கொள்ளல் தமிழர்களுக்குள் பொதுவாக இருந்தது. இன்று தமிழர்களின் நிலை என்ன? எத்தனை ஆயிரம் குலங்கள் குலத்துக்குள் குலங்களாகக் கோத்திரங்கள் எவ்வளவு- பிரிவுகள் ! ஒரே குலத்தினைச் சேர்ந்தவர்களிடையில் கூடப் பெண் கொடுத்தல் கொள்ளல் தடுக்கப் பட்டுத் தமிழ் மக்கள் எத்தனை எத்தனை சில்லறைக் கூட்டங்களாகப் பிரிக்கப் பட்டு விட்டனர்!

நாட்டுடைத் தலைவர்களாக என்னாட்டவர்க்கும் அடிமைப்படாத வீர மறவர்களாக காடழித்து நாடாக்கியர்வர்களாக நீர் வளம், நில வளம் , குடிவளம் கருதிப் பணியாற்றியவர்களாக கடல் வாணிபம் நடத்தியவர்களாக உரோமாபுரி எகிப்தியம் யவனம் சீவகம் கடாரம் போன்ற நாடுகளுடன் தொடர்புடையவர்களாக வாழ்ந்தனர் தமிழ் மக்கள்! அத்தமிழ்ப் பெரு மக்களின் மரபினராகிய நாம் இன்று எடுப்பார் கைப் பிள்ளைகளாக தடி எடுத்தவனை எல்லாம் தண்டல்காரனாக மதித்து அடிமைப்படும் குறை மதியினராக அஞ்சியஞ்சிச் சாகும் கோழைகளாக வறுமையில் வாடி இன்று அதையே நம்பி வாழ்பவர்களாக கடல் கடந்து சென்று வயிறு வளர்க்கும் கூலிகளாக ஆனதேன்? சிந்தித்துப் பார்த்ததுண்டா?

எத்தொழில் புரிபவரேயாயினும் - யாவரேயாயினும் -ஆண்களாயினும் -பெண்களாயினும் கற்பதைக் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் மறைந்த தமிழர்கள், கூல வாணிகம், மருத்துவம், மட்பாண்டம் வனைதல் போன்ற பிற தொழில்களில் ஈடுபட்டிருந்தோரும் பழந்தமிழ் நாட்டில் கசடறக் கற்ற பேரறிஞர் களாய் இருந்தனர். காக்கைப் பாடினியர், நச்செள்ளையார், ஔவையார் போன்ற தமிழ்ப் பெண்மணிகளும் பெரும் புலவர்களாய் இருந்தனர். வீரம் செறிந்திருந்தனர்.
ஆனால் இன்று தமிழர்களில் ௧00 க்கு ௯௫ பேர்கள் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகளாய்க் கிடப்பானேன்!

அந்தப் பழங்காலத்தில் உலக நாகரிகத்திற்குத் தாயகமாய் விளங்கியது தமிழ்நாடு. எலி மயிரினும் நுண்ணிய ஆடைகளை நெய்து உலகிற்கு ஈந்து உயர் புகழ் படைத்தது தமிழ் நாடு. உணவு வளம், உடை வளம், உறைவிட வளம் பெற்ற அப்பழங்குடித் தமிழ் மக்கள் உடல் வளமும் உயிர் வளமும் உடையவர்களாக உரம் மிக்க மறவர்களாக மகிழ்ச்சிப் பெருக்குடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று..?
இன்று கூட இயற்கையிலே வளம் குறைந்ததன்று நம் நாடு. நன்செய் , புன்செய் நிலங்கள் மலிந்துள்ள நாடே நம் நாடு. வற்றாப் பேராறுகள் பெருக்கெடுத்தோடும் நாடே நம் நாடு.தங்கம் விளையும் நாடே நம் நாடு. இவ்வளவு இருந்தும் இன்று கோடானு கோடித் தமிழர்கள் உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி அல்லல் படுவது எதனால்?

கப்பற் படை நடத்திக் கடல் கடந்து சென்று சிங்களத்தையும் கடாரத்தையும் கைப்பற்றிய தமிழர், இமயத்தின் உச்சி கண்டு திராவிடக் கோடி பொறித்த தமிழர் , உரோமருக்கும் எகிப்தியருக்கும் சீனருக்கும் யவனருக்கும் உடுப்பளித்த, உணவளித்த தமிழர்- நாகரிகத்தைப் பண்பை, கலைத்திறனை வீரத்தைப் பெருமையை நிலை நாட்டிய தமிழர் மரபில் தோன்றிய மக்கள் இன்று பல்லாயிரக் கணக்கில் தோட்டக் கூலிகளாகவும் சுரங்கக் கூலிகளாகவும் அக் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று அரை வயிற்றுணவும் இன்றி குடியிருக்கத் தகுந்த குடிசையுமின்றி அவதிப்படுவது எதனால்? சிந்தித்துப் பார்த்தீர்களா?

பழங் காலத்தில் இவ்வளவு உன்னத நிலையில் இருந்த தமிழ் நாட்டை தமிழ் மக்களை இன்றுள்ள அடிமைத் தனத்திலும் சீர்கேட்டிலும் ஆழ்த்தி தமிழ் மக்களைப் பராரிகளாக்கி வைத்த கொடுஞ்செயல் புரிந்த அக் கொடியோர் யார்? அக் கொடுஞ்செயல் என்ன? சிந்தித்துப் பார்த்தீர்களா ?

இன்றோ அறியாமை எனும் இருட்டு, அமாவாசை இரவை விடக் கடுமையாக நம் நாட்டைக் கவ்விக் கொண்டிருக்கிறது . ஒன்றிரண்டல்ல, ஆயிரமாயிரம் சாதிகள் இங்குப் பல்கிப் பெருகி, அவிழ்த்துக் கொட்டிய மூட்டையினின்று உருண்டோடும் நெல்லிக் கனிகள் போன்று மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். மாரியம்மன் முதல் மன்னார்சாமி வரை , மண் உருவங்கள் முதல் பெண் உருவங்கள் வரை பாம்பு முதல் பன்றி வரை சுமார் ௩௩ கோடி விதமான கடவுள்கள் நாம் வணங்க வேண்டியவை ஆக்கப்பட்டன. சாணிக்குப் போட்டிட்டு அதையும் சாமி என வணங்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டு விட்டது.

இவ்வளவுக்கும் காரணம் என்ன? சிந்தித்துப் பாருங்கள். பார்ப்பனர்களும் அவர்களின் மத ஆசாரங்களும் மொழியும் வேத ஆகம புராண சாஸ்திர இதிகாசங்களுமே ஆகும் என்பதை எவராலாவது மறுக்க முடியுமா?

பார்ப்பனர்கள் -ஆரியர் இந்த நாட்டுக்குச் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர். இலக்கண வரம்பு இல்லாத தங்கள் சமஸ்கிருத மொழியைத் தெய்விக மொழியெனப் பரப்பினர். முயற்சியில் - வீரத்தில் - உழைப்பில் நம்பிக்கை கொண்டிருந்த தமிழரை, தலைவிதி - கர்ம - பலன் பாவ புண்ணியம் - நரக மோட்சம் என்னும் சூழ்ச்சிச் சொற்களில் அந்தப் பார்பனர்கள் சிக்கவைத்து விட்டனர்.

ஆரியச் சனாதன வெறியர்கள் நம் நாட்டில் சூழ்ச்சியாலும் , சதிச் செயல்களாலும், பிற இழி செயல்களாலும் தங்கள் ஆபாச அநாசார மதக்கேடுகளைப் பரப்பி, இந்த நாட்டு மக்களைப் படிக்க விடாமல் மனு சாஸ்திரம் என்னும் அதரும நூலைச் சட்டமாக்கி வைத்துவிட்டனர். மக்களில் பார்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகுப்பினர் என்று பிரித்து, பார்பனர் என்போர் பிரமன் என்னும் கடவுளின் நெற்றியில் பிறந்ததால் மிக உயர்தோர் என்றும், சத்திரியர் தோளிலும், வைசியர் வயிற்றிலும் , சூத்திரர் காலிலும் பிறந்ததால் முறையே ஒருவருக்கொருவர் மட்டமென்றும் உயர்வு தாழ்வு கற்பித்து விட்டனர். சமஸ்கிருத நூல்களைப் பெருவாரியான கடைசி இன மக்கள் படிக்கவோ, கேட்கவோ கூடாதெனத் தடை செய்து விட்டனர்.

இந்நிலையில், பிரமன் ஆகிய ஆண் கடவுள் பிள்ளை பெற முடியுமா என்றோ, அப்படியே பெற்றான் என்றால், அவனுக்கு நெற்றியிலும் தோளிலும் வயிற்றிலும் காலிலும் பெண்குறிகள் இருந்தனவா என்றும், அப்படியே இருந்தனவென்றால் யாருடைய விந்துக்கு இந்த பார்ப்பனர், சத்திரியர் வைசிய சூத்திரர்கள் பிறந்தனர் என்றும் கேட்கும் துணிவை நம் மக்கள் இழந்தனர். இத்தகைய மானக்கேடான கதைகளே ஆரிய-வேத-ஆகம -இதிகாச, சாஸ்திர - புராணங்கள் என்பனவற்றில் உள்ளவை.

பார்பனர்களாம் ஆரியர்களின் சமஸ்கிருத மொழி என்பது இலக்கண வரம்பிலா மொழி ஆகையால், அது வழக்கு ஒழிந்து மொழியிலுள்ள ஆபாச நூல்கள் படிப்பாரர்றுக் கிடந்தாலும், அவற்றின் தத்துவங்கள் நம் மக்கள் மனத்தில் பதிந்துவிட்டன. ௧00-க்கு ௯௫ பேர்கள் நம்முள் கல்வி அறிவற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டப்படியால், அவற்றின் ஆபாச அனாசாரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அவற்றை அப்படியே நம்பி ஆழ்ந்த மடமையில் மூழ்கிவிட்டனர்.

எத்து மக்கள் நம்பி கிடக்கும் அந்த ஆரிய ஆசாரம் எத்தகையது தெரியுமா? மணந்து கொள்ள விரும்பாத பெண்ணை அவள் அழுந்து புலம்பி மன்றாடினாலும், அவளுடைய உறவினர்கள் தடுத்தாலும் அவர்களை அடித்து கொன்று, அவளை வலிமையால் கொண்டு சென்று புணர்வதும், ஒருத்தி தூங்கி கொண்டிருக்கையிலும், மயக்க நிலையிழிறுக்கயலும், அவளை புனவர்வதும், ஆரிய ஆசாரப்படி திருமனங்கலேயாகும். இவை பார்பனரின் எட்டு வகைதிருமனங்களிர் சேர்ந்தவை.

ஒருத்தி பிள்ளை பெறாமலிருந்தால், பிள்ளை பெறுவதற்காக வேண்டி ௧௧ பேர்களுடன் கலவி செய்யலாம். இப்படிக் கலவி செய்யும் தம் மனைவியை அவள் கனவான் உத்தமியாகவே மதிக்க வேண்டும்; விபசாரியாக கருதக்குடாது. இது பார்பான வேத ஆசாரம்.

பார்பனர்களின் கடவுள் பட்டியலை பார்த்தல், ஆண் கடவுளாக இருந்தாலும் சரி, பெண் கடவுளாக இருந்தாலும் சரி, விபசாரம் செய்யாத ஒன்றையும் காட்ட முடியாது.ஒவ்வொரு ஆண் கடவுளுக்கும் மாணவிகள்- கூத்திகள் என்றும், பெண் கடவுளுக்குக் கணவர்கள் -சோர நாயர்கள் என்றும் இருக்கும். ஒரு பெண்ணை நிர்வாணமாக நிறுத்தி அவள் பெண் குறிக்குப் பூசையிடும் வழக்கமும் ஆரிய ஆசாரத்தில் உண்டு. ஆரியர்களுடைய மதம் நமக்குக் கற்பித்துள்ள கடவுள்களின் தன்மை அம்மம்மா எழுத்தால் விளக்க ஒனாதது.சான்றுக்கு ஒரு சில தருகிறேன்


தொடரும்