ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் நூல் அணிந்துரை தொடர் 2

a௧. சூரியனுடைய தேர் சாரதியின் பெயர் அருணன். இவன் இருகால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை விநோதங்களைக் காண்பதற்கு பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர சூரியன் காரணம் கேட்டு நடந்ததை அறிந்து மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வர வேண்டி அவன் அப்படியே வர அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

௨. நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ணா பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர அதன் பயனாய் ௬0 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.

௩. தவ வலிமை மிக்க பத்மாசூரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது , மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பத்மாசூரனை மயக்கி , அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின் , அந்த மோகினி வேதத்திலிருந்து விஷ்ணுவை , உயிருக்கு பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்து சிவன் மோகித்து புணர , அதன் பலனாக அரிதார புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தை காட்டுபவை அல்லவா?

௪. பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவ சென்றிருந்தபோது , அங்கிருந்த சித்திரகூடத்தில் ஆண் -பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவியத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு , பக்கத்தில் இருந்த பார்வதியைப் பெண் யானையக்கி புணர்ந்து , கணபதியைப் பெற்றான் .
௫. சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.
௬. பிரமன் திலோத்தமையைப் படைத்து வளழகைக் கண்டு மோகிக்க அவள் பிரமன் செயல் கண்டு பயந்து பெண் மானுருக் கொண்டு ஓட பிரமன் அவளைத் துரத்திக் கொண்டு போய்ப் புணர்ந்தான்.

௭. பாரிஷதன் என்பவனின் மனைவி வபுஷ்டமை என்பவள் மீது இந்திரன் காமம் கொள்ள அவள் அவனுக்கு இணங்காமற் போக இந்திரன் எப்படியாவது அவளைச் சேர்ந்தேயாக வேண்டும் என்று எண்ணிச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சமயம் பாரிஷதன் அஸ்வமேதம் நடத்தினான். யாக குதிரையுடன் யாக கர்த்தாவின் மனைவியைப் புணர வைப்பது அச்வமேதத்தின் முக்கியச் சடங்கு. ஆகையால் தான் யாக குதிரையாக இருந்தால் பாரிஷதன் மனைவியாகிய வபுஷ்டமையிடத்து யாகப் புரோகிதர்களே சேர்த்து வைப்பார்கள். ஆகையால் தான் யாக குதிரையாக வேண்டுமென்று இந்திரன் உறுதி செய்து கொண்டான். அதன்படி அஸ்வமேதம் நடந்த போது இந்திரன் யாகக் குதிரையைக் கொன்று அதனுடலில் தான் புகுந்து கொண்டான். யாக முறைப்படி யாகக் கர்த்தாவாகிய பாரிஷதனின் மனைவியாகிய வபுஷ்டவையின் பெண் குறியில் யாக ஆண் குதிரையின் குறியை யாகப் புரோகிதர்கள் சேர்த்து வைத்த சமயத்தில் இந்திரன் தம் காம எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான்.


௯ அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாக கர்த்தாவின் பத்தினியை, யாக மிருகத்துடன் புணரவைக்கும் வேலையை யாககர்த்தாவும் யாகப்புரோகிதர்களும் சேர்ந்து செய்வர்.
௧0.பூமியைப் பாய் போலச் சுருட்டிக் கொண்டு கடலில் போய் ஒளித்த இரண் யாஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக் கண்டு பூதேவி மோகித்துக் கலவிசெய்ய, இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்.
இவை மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?
தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக